பிறந்த நாளை அது வரை கொண்டாட்டமாய்
எண்ணியதில்லை.. எதைக் கொண்டாட என தயங்கிய நேரத்தில், எதுவென்று தெரியாத பிறந்த
நாளைக் கொண்டாட நண்பர்கள் நாள் குறித்தபோது மறுக்கவுமில்லை.... கேக் வெட்டி ஹேப்பி
பர்த் டே சொன்னபோது உலகமே கொண்டாட ஆரம்பித்தது அது புத்தாண்டென... அலை பேசி ஒலித்தது
உன் பெயரோடு... “வீட்டிற்கு தெரியாமல் பேசுகிறேன் வாழ்த்துக்கள்” என அவசரமாய் துண்டித்துக்
கொண்டது உன் குரல், ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்ந்தது என் மனம்!!!!!!
No comments:
Post a Comment