7 November 2012

நடைபிணங்கள்



பசிக்கான உணவு; தேடலுக்கான கல்வி
உரிமைக்கு உலை வைக்காத அரசியல்
விலை பேசி விடாத வளர்ச்சி
சாதியில்லா சமூகம்; இருட்டிலிருந்து வெளிச்சம்;
விளைச்சலுக்கு தண்ணீர் – என
அத்தனைக்கும் போராடுகிற தேசத்திலிருந்து
தேசத்திற்காய் போராடிய உங்களுக்கு
உதவாமல் போனது எங்களின் இயலாமை தான்
ஆனாலும் செத்துப்போனது முத்துக்குமார் மட்டுமல்ல
நாங்களும் தான்.. இப்போது நடைபிணங்கள் அவ்வளவே...

No comments:

Post a Comment